பட்டுக்கூடு அங்காடியில் வரத்து அதிகரிப்பு

தர்மபுரி அரசு பட்டுக்கூடு அங்காடியில் ரூ.9.14 லட்சத்திற்கு பட்டுக்கூடுகள் விற்பனையானது.
தர்மபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். கடந்த சில நாட்களாக பட்டுக்கூடு உற்பத்தி குறைவு காரணமாக இந்த அங்காடிக்கு பட்டுக்கூடு வரத்து குறைந்தது. இதற்கிடையே உற்பத்தி அதிகரிப்பு காரணமாக நேற்று அங்காடிக்கு பட்டுக்கூடுகள் வரத்து 1,697 கிலோவாக அதிகரித்தது. நேற்று கிலோவிற்கு 1 ரூபாய் விலை குறைந்தது. 1 கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக 610 ரூபாய்க்கும், குறைந்தபட்சமாக 266ரூபாய்க்கும், சராசரியாக 538.51 ரூபாய்க்கும் விற்பனையானது. மொத்தம் 9 லட்சத்து 14 ஆயிரத்து 335 ரூபாய்க்கு பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டது.

Tags

Next Story