சங்கரன்கோவிலில் பேருந்து பணிமனை நடத்துனர் தர்ணா போராட்டம்

சங்கரன்கோவிலில் பேருந்து பணிமனை நடத்துனர் தர்ணா போராட்டம்
 தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நடத்துநர்
சங்கரன்கோவில் பேருந்து பணிமனை நடத்துனர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனையில் நடத்துனராக பணிபுரிந்து வருவார் முருகன் இவர் பணிமனை மேலாளரிடம் கேள்வி எழுப்பியதால் நடத்துனர் நெல்லைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

நடத்துனர் முருகனை பழி வாங்கும் விதமாக பணிமனை அதிகாரிகள் ஈடுபட்டு வருவதானால் கடந்த மாதம் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். ஆனால் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தின் போது நடத்துனரை பணி மாறுதல் கொடுக்காமல் மேலாளர் காலம் தாழ்த்தியுள்ளார். தற்போது உடனடியாக பணி மாறுதல் வாங்கிச் செல்லுமாறு கிளை மேலாளர் மிரட்டி வருவதாக நடத்துனர் முருகன் தெரிவித்தார்.

எனவே அதிகாரிகள் மீது கேள்வி எழுப்பியதால் பணியிட மாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேருந்து பணிமனை நடத்துனர் முருகன் பணிமனை வாசலில் தரையில் அமர்ந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

தற்போது அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படாததால் நடத்துனர் முருகன் தொடர்ந்து தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்... சங்கரன்கோவில் பேருந்து பணிமனையில் நடத்துனர் ஒருவர் அதிகாரிடம் கேள்வி எழுப்பியதற்காக பணியிட மாற்றம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story