திப்ரூகா் - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ஜூலை முதல் நாள்தோறும் இயக்கம்

திப்ரூகா் - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ஜூலை முதல் நாள்தோறும் இயக்கம்

திப்ரூகா் - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ஜூலை முதல் நாள்தோறும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


திப்ரூகா் - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ஜூலை முதல் நாள்தோறும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம் வழியாக திப்ரூகா் - கன்னியாகுமரி மற்றும் கன்னியாகுமரி - திப்ரூகா் விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் வாரத்தில் 5 நாள்கள் இயக்கப்படுகிறது. இந்த ரயில்கள் ஜூலை மாதம் முதல் தினசரி இயக்கப்படும். அதன்படி, கன்னியாகுமரி - திப்ரூகா் விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் அடுத்த மாதம் 12-ஆம் தேதி முதல் தினமும் இயக்கப்படும்.

கன்னியாகுமரியில் இருந்து மாலை 5.25 மணிக்கு புறப்பட்டு கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம் வழியாக 4-ஆவது நாள் இரவு 8.50 மணிக்கு திப்ரூகா் சென்றடையும். இதேபோல, மறுமாா்க்கத்தில் திப்ரூகா்- கன்னியாகுமரி இடையேயான எக்ஸ்பிரஸ் ரயில் அடுத்த மாதம் 8-ஆம் தேதி முதல் தினசரி இயக்கப்படும். இந்த ரயில், திப்ரூகா் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 7.55 மணிக்கு புறப்பட்டு காட்பாடி, சேலம், ஈரோடு, திருப்பூா், கோவை வழியாக 4-ஆவது நாள் இரவு 9.55 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story