வேலைக்குச் செல்வது பிடிக்கவில்லை: தந்தை கூறியதால் மகள் உயிரிழப்பு

வேலைக்குச் செல்வது பிடிக்கவில்லை: தந்தை கூறியதால் மகள் உயிரிழப்பு

காவல் நிலையம்

கரூர் அருகே வேலைக்குச் செல்வது பிடிக்கவில்லை என தந்தை கூறியதால் மகள் தற்கொலை செய்து கொண்டார்.

கரூர் மாவட்டம், புகலூர் தாலுக்கா, நாவலடி நகர் பகுதியை சேர்ந்தவர் மகாராஜா மகள் ஹேமா வயது 21. ஹேமா, கோவையில் உள்ள டிஎன் சொல்யூஷன் என்ற நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். மகள் ஹேமா வேலைக்கு செல்வது அவரது தந்தை மகாராஜாவுக்கு பிடிக்கவில்லை.

இதனால் வேலைக்கு செல்ல வேண்டாம் என கூறியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஏப்ரல் 25ஆம் தேதி மதியம் 2 மணி அளவில், ஹேமா அவரது வீட்டின் அருகே சுய நினைவற்ற நிலையில் கிடந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அறிந்த ஹேமாவின் தாயார் ஜெயபாரதி வயது 49 என்பவர், காவல்துறையினருக்கு அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர்,

உயிரிழந்த ஹேமாவின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.

Tags

Next Story