பட்டுக்கோட்டை அருகே பேருந்து படிக்கட்டில் தவறி விழுந்து பலி

பட்டுக்கோட்டை அருகே பேருந்து படிக்கட்டில் தவறி விழுந்து பலி
கோப்பு படம் 
பட்டுக்கோட்டை அருகே பேருந்து படிக்கட்டில் தவறி விழுந்து பலியானர்.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை காளையம்பாடி தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம்( 42). இவர் சனிக்கிழமை காலை தனது சொந்த வேலையாக கந்தர்வகோட்டையில் இருந்து புறப்பட்ட தனியார் பேருந்தில் பட்டுக்கோட்டைக்கு பயணம் செய்துள்ளார்.

அப்போது பேருந்து புதுவிடுதி அருகே பாலத்தை கடந்து சென்ற போது பேருந்தில் நின்ற ஒரு பெண் தவறவிட்ட பொருள் பேருந்தின் முன்பக்க படிக்கட்டில் விழுந்தது. அதை எடுப்பதற்காக ஓடும் பேருந்தில் குனிந்து ஆறுமுகம் எடுத்துள்ளார்.

அப்போது எதிர்பாராதமாக பேருந்தில் முன்பக்க கதவு வழியாக தவறி சாலையில் விழுந்து பலத்த காயமடைந்தார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி ஆறுமுகம் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து திருவோணம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணையில் நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story