டூவீலர் விபத்தில் ஒருவர் பலி

டூவீலர் விபத்தில் ஒருவர் பலி

வாலாஜாவில் நடந்த டூவீலர் விபத்தில் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றொரு நபர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வாலாஜாவில் நடந்த டூவீலர் விபத்தில் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றொரு நபர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா கச்சால நாயக்கன் தெருவை சேர்ந்தவர் சின்னப்பையன் (65). இவரும் வாலாஜா வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த பெருமாள் (54) என்பவரும் அங்குள்ள சீனிவாச பெருமாள் கோவில் தெருவில் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வேகமாக வந்த தனியார் கம்பெனி பஸ் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு காயம் அடைந்தனர்.

அவர்கள் இருவரையும் சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது சின்னப்பையன் வழியிலேயே இறந்துவிட்டார். பெருமாள் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து வாலாஜா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story