அதிமுக கவுன்சிலர் கொடுத்த வித்தியாசமான வரவேற்பு !

அதிமுக கவுன்சிலர் கொடுத்த வித்தியாசமான வரவேற்பு !

அதிமுக

பூங்கொடுத்து வரவேற்ற கவுன்சிலர் அனைவருக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தும் போது ஒரு சால்வைக்கு ஒரு இளநீர் என்ற முறையில் சால்வை போற்ற ஒவ்வொருவருக்கும் ஒரு இளநீர் கையில் கொடுத்து வித்தியாசமாக வரவேற்பு அளித்து வெயிலால் ஏற்ப்படும் சூட்டை தனித்தார்.

ஸ்ரீ பெரும்புதூர் தொகுதி அதிமுக சார்பில் மருத்துவர் பிரேம்குமார் வேட்பாளராக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார் இந்த நிலையில் மக்களைத் தொகுதிக்குட்பட்ட மதுரவாயல் சட்டமன்ற தொகுதியில் 145 ஆவது வார்டு அதிமுக கவுன்சிலர் சத்தியநாதன் ஏற்பாட்டில் நெற்குன்றம் பகுதியில் அதிமுக தேர்தல் பணி மணியானது திறக்கப்பட்டது.

இதனை முன்னாள் அமைச்சர்கள் பெஞ்சமின் ,டி .கே .எம் சின்னையா உள்ளிட்ட அதிமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர் அப்போது வந்தவர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக கையில் பூங்கொடுத்து வரவேற்ற கவுன்சிலர் அனைவருக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தும் போது ஒரு சால்வைக்கு ஒரு இளநீர் என்ற முறையில் சால்வை போற்ற ஒவ்வொருவருக்கும் ஒரு இளநீர் கையில் கொடுத்து வித்தியாசமாக வரவேற்பு அளித்து வெயிலால் ஏற்ப்படும் சூட்டை தனித்தார்.

இதில் பகுதி செயலாளர் தேவதாஸ் ,முன்னாள் கவுன்சிலர் தென்றல் குமார்,துணை வட்ட செயலாளர்கள் பாரதி,பாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக தேர்தல் பணிமனை திறப்பின் போது கிறிஸ்தவ பாதிரியார் ஒருவரால் ஜெபம் செய்யப்பட்டு அதிமுக வெற்றி காண வேண்டும் என அனைவரும் ஒன்றிணைந்து பிரார்த்தனை செய்யப்பட்டு பணிமனை திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story