எலச்சிபாளையத்தில் சாக்கடையில் கொசுபிடிக்கும் நூதன போராட்டம்

எலச்சிபாளையத்தில் சாக்கடையில் கொசுபிடிக்கும் நூதன போராட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளைக் கூட்டம்

எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு உள்ள தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர்.சாக்கடை கழிவுநீர் குட்டை போல் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எலச்சிபாளையம் கிளைக் கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலை சார்பில் இருபுறமும் சாலை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்றது அப்போது எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு உள்ள சாக்கடை கால்வாய் தாழ்வான பகுதியில் அமைக்கப்பட்டதால் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி சாக்கடை கழிவுநீர் வெளியேறாமல் மளிகை கடை, ஜெராக்ஸ் கடை, அரசு அலுவலகம் என அனைத்து பகுதி மக்களையும் பாதிக்கின்ற வகையில் தேங்கி நிற்கிறது .இதுகுறித்து பலமுறை அரசு அதிகாரிகளுக்கு முறையிட்டு எவ்வித நடவடிக்கை எடுக்கப்படாதால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வருகின்ற 25ஆம் தேதி அன்று கொசு பிடிக்கும் போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர் சு.சுரேஷ். ஒன்றிய செயலாளர்கள் கே.எஸ். வெங்கடாசலம் .வீ.தேவராஜன் மாவட்ட குழு உறுப்பினர் பழனியம்மாள். ஒன்றிய குழு உறுப்பினர்கள் ரமேஷ். உட்பட பலர் கலந்து கொண்டனர்.



Tags

Next Story