மாற்று திறனாளிகள் குறைத்தீர் கூட்டம்

மாற்று திறனாளிகள் குறைத்தீர் கூட்டம்

குறைத்தீர் கூட்டம் 

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைத்தீர் கூட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு தேவையான மூன்று சக்கர வாகனம், காது ஓலி கருவி ,கண் கண்ணாடி வாக்கிங் ஸ்டிக் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தேவைக்கான மனுக்களை மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் வழங்கினர்.

மாற்றுத்திறனாளிகளுக்கு புகார் மனு அளிக்க ஏதுவாக மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் அலுவலக ஊழியர்கள் புகார் மனுக்களை தயார் செய்து கொடுத்தனர்.

Tags

Next Story