பதக்கம் வென்ற போலீசாருக்கு டி.ஐ.ஜி. பாராட்டு

பதக்கம் வென்ற போலீசாருக்கு டி.ஐ.ஜி. பாராட்டு

தமிழ்நாடு காவல்துறை சார்பில் மண்டல அளவில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற போலீசாருக்கு டி.ஐ.ஜி. பாராட்டு தெரிவித்தார்.


தமிழ்நாடு காவல்துறை சார்பில் மண்டல அளவில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற போலீசாருக்கு டி.ஐ.ஜி. பாராட்டு தெரிவித்தார்.

தமிழ்நாடு காவல்துறை சார்பில் மண்டலங்களுக்கு இடையேயான தடகள போட்டிகள் கோயம்புத்தூரில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் கடந்த 12-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை நடை பெற்றது

. இப்போட்டிகளில் கடலூர் நகர போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதல் பரிசும், 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 2-ம் பரிசும், ஏட்டு அன்வர் அலி, குண்டு எறிதல் போட்டியில் 2-ம் பரிசும் வென்றனர். இதே போல் அமைச்சுப்பணியாளர்கள் சிலர், விளையாட்டு போட்டிகளில் வென்றுள்ளனர். இவர்கள் அனைவரும் விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. திஷா மித்தலை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Tags

Next Story