புதுப்பிக்கப்பட்ட சோதனை சாவடியை திறந்து வைத்த டிஐஜி

புதுப்பிக்கப்பட்ட சோதனை சாவடியை திறந்து வைத்த டிஐஜி

திறப்பு விழா 

காட்பாடி அருகே புதுப்பிக்கப்பட்ட சோதனை சாவடியை டிஐஜி திறந்து வைத்தார்.
வேலூர் மாவட்டம் காட்பாடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிறிஸ்டியான் பேட்டை பகுதியில் அமைந்துள்ள மாநில காவல்துறை சோதனை சாவடி புதுப்பிக்கப்பட்ட வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் முத்துசாமி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் மற்றும் காவல் அதிகாரிகள் உடன் இருந்தனர். கிறிஸ்டியான் பேட்டை சோதனை சாவடி ஆந்திரா மற்றும் தமிழ்நாடு எல்லை பகுதியில் முக்கியமான சோதனை சாவடியாகும், இச்சோதனைச் சாவடி வழியாக அரசால் தடை செய்யப்பட்ட (குட்கா, கஞ்சா மற்றும் கள்ளச்சாரயம்) போன்ற போதைப் பொருட்களை சட்டவிரோதமாக கடத்துவதை தடுக்கும் வகையில் 24 மணி நேரமும் நவீன CCTV Camera உதவியுடன் கண்காணிக்கப்பட்டு வருகின்றது . இந்த சோதனை சாவடி தற்பொழுது புதுப்பிக்கப்பட்டு உள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story