இடிந்து விழும் நிலையில் வாய்க்கால் பாலம் - சீரமைக்க கோரிக்கை

இடிந்து விழும் நிலையில் வாய்க்கால் பாலம் - சீரமைக்க கோரிக்கை

பழுதடைந்த பாலம் 

குமாரபாளையம் அருகே  இடிந்து விழும் நிலையில் உள்ள வாய்க்கால் பாலத்தை சீரமைக்க கோரிக்கை எழுந்துள்ளது
. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி, வீரப்பம்பாளையம் பகுதியில், மேட்டூர் கிழக்குக்கரை வாய்க்கால் குறுக்கே பாலம் ஒன்று பல ஆண்டுகள் முன்பு கட்டப்பட்டது. இது சின்னாயக்காடு, ஆனங்கூர் சாலை, நல்லாம்பாளையம், உள்ளிட்ட பல கிராமப்பகுதிகளை இணைக்கும் விதமாக உள்ளது. இந்த பாலம் மிகவும் பழுதாக உள்ளதால், லாரி, டெம்போ, கார் ஆகிய வாகனங்கள் மிகுந்த அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளது. கட்டுமான பொருட்கள் கொண்டு செல்லவும், நூல் பேல்கள் எடுத்து வரவும், நெல் மற்றும் அரிசி மூட்டைகள், கரும்பு லோடு, உர மூட்டைகள் ஏற்றிவரும் டிராக்டர்கள் வரவும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பழுதான பாலத்தை சீரமைத்து தர வேண்டி இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story