பழுதடைந்து தொகுப்பு வீடுகள்: அதிகாரிகளுடன் ஆட்சியர் கள ஆய்வு!

பழுதடைந்து தொகுப்பு வீடுகள்: அதிகாரிகளுடன் ஆட்சியர் கள ஆய்வு!

ஆட்சியர் வளர்மதி

காவனூர் ஊராட்சியில் பழுதடைந்துள்ள தொகுப்பு வீடுகளை பழுது பார்ப்பது குறித்து ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட காவனூர் ஊராட்சியில் ஜெயந்தி என்பவரின் வீடு பழுதடைந்துள்ளது. அதேபோன்று அதே பகுதியில் உள்ள கல்வி என்பவரின் வீடும் பழுதடைந்து இருந்தது. இந்த நிலையில் பழுதடைந்த தொகுப்பு வீட்டை தொகுப்பு வீடுகள் சீரமைப்பு திட்டத்தின் கீழ் சீரமைக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் வளர்மதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வீடுகளை சீரமைப்பது குறித்து ஆட்சியர் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், சரவணன் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டார்.

Tags

Next Story