திருவப்பூரில் தீ மிதி திருவிழா!

புதுக்கோட்டை திருவப்பூர் செல்லாயி அம்மன் கோயில் மார்கழி மாதத்தை முன்னிட்டு பால்குடம் எடுத்தல் மற்றும் தீ மிதி திருவிழா நடந்தது. திருவப்பூர் மற்றும் சௌராஷ்டிரா சமூகத்தை சேர்ந்த பக்தர்கள் நூற்றுக்கும் அதிகமானோர் விரதம் இருந்து வேணுகோபால் சுவாமி கோயிலில் இருந்து பால்குடம் எடுத்து ஊர்வலமாக செல்லாயி அம்மன் கோவிலுக்கு வந்தனர். அங்கு அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் இறங்கி அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. திருவப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story