டிமிக்கி பஸ்சால் மாணவர்கள் சிரமம்!

டிமிக்கி பஸ்சால் மாணவர்கள் சிரமம்!

திருமயத்துக்கு இயக்கப்படும் பஸ் சரிவர நிறுத்தப்படாததால், மாணவர்கள் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.

திருமயத்துக்கு இயக்கப்படும் பஸ் சரிவர நிறுத்தப்படாததால், மாணவர்கள் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பொன்னமராவதியில் இருந்து காங்கேயம் வழியாக திருமயத்துக்கு அரசு டவுன் பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ் காலை 5:30 , 7:45 மதியம் 12:45 பிற்பகல் 3 மணி மாலை 6 மணி ஆகிய நேரங்களில் பொன்னமராவதியில் இருந்து புறப்பட்டு ராங்கியம் , துர்வாசபுரம், சேதுரப்பட்டி ,வாரியா பட்டி வழியாக திருமயம் வந்து செல்லும்.

இந்நிலையில் இந்த பஸ் மதியம் 12:30 மணி மாலை 3 மணி ஆகிய நேரங்களில் பொன்னமராவதி புறப்பட்டு ராங்கியம், அரசமரம் நிறுத்தத்துடன் திரும்பி விடுகிறது. இதனால் திருமயம் செல்லும் பயணிகள் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். அதேபோல் திருமயத்துக்கு மாலை 4 மணிக்கு வர வேண்டிய பஸ் வராததால் கீழ துர் வாசபுரம், சேதுராப்பட்டி, வாரியாபட்டி, அண்டக்குடிப்பட்டி, காங்கேயம் செல்ல வேண்டிய மாணவ, மாணவிகள் நடந்தோ, சைக்கிளிலோ செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

பஸ்ஸை உரிய நேரத்துக்கு இயக்க அரசு போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Tags

Next Story