கொடைக்கானலாக மாறிய திண்டுக்கல்

கொடைக்கானலாக மாறிய திண்டுக்கல்

திண்டுக்கல் மாநகரம் முழுவதும் பனி மூட்டத்துடன் காணப்படுகிறது

திண்டுக்கல் மாநகரம் முழுவதும் பனி மூட்டத்துடன் காணப்படுகிறது
திண்டுக்கல் நகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நாள் முழுவதும் மேகமூட்டமாக இருந்ததால் நேற்று முழுவதும் சூரியன் தென்படாத நிலை காணப்பட்டது. திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மழை, வெள்ளம் அதிக பாதிப்புகளை ஏற்படுத்திய நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் அதன் தாக்கமாக சில தினங்கள் சாரல் மழை மட்டும் பெய்தது. இதையடுத்து நேற்று காலை முதலே மேக மூட்டம் காணப்பட்டது. அதிகாலை முதல் பனி அதிகரித்து காணப்பட்ட நிலையில், தொடர்ந்து காலை, பகல், மாலை என நாள் முழுவதும் மேக மூட்டமாகக் காணப்பட்டது. இதனால் கொடைக்கானலில் உள்ள கால நிலையைப் போல் திண்டுக்கல் நகரம் காணப்பட்டது.

Tags

Next Story