மக்கள் குறைதீர் கூட்டத்தில் சலசலப்பு!

மக்கள் குறைதீர் கூட்டத்தில் சலசலப்பு!

பொதுமக்கள்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு அதிகாரிகள் வராததால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு இன்று (மார்ச்.4) காலை 10:30 மணி வரை அதிகாரிகள் வரவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். மேலும் இதனால் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து தங்களது புகார் மனுவுடன் பொதுமக்கள் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது. இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

Tags

Next Story