திண்டுக்கல் : நாளை எங்கெல்லாம் மின்தடை ?

திண்டுக்கல் : நாளை எங்கெல்லாம் மின்தடை ?

மின்தடை 

திண்டுக்கல் துணைமின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மின் விநியோக பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் துணைமின் நிலையத்தில் நாளை 18ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பொன்னகரம், நல்லாம்பட்டி, ரெட்டியபட்டி, வாழைக்காய் பட்டி, சிறுமலை அடிவாரம், நரசிங்கபுரம், தோமையார்புரம், மேட்டுப்பட்டி, தொழிற்பேட்டை, என்.ஜி.ஓ காலனி, பாலகிருஷ்ணாபுரம், தோட்டனூத்து, ஆர்எம்டிசி காலனி, அடியனூத்து, நல்லமநாயக்கன்பட்டி, உத்தனம்பட்டி, காப்பிளயபட்டி, நாகல்புதூர், பாரதிபுரம், ரயில் நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என உதவி செயற்பொறியாளர் மணிகண்டன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story