திண்டுக்கல் : உலக மண் தின விழா

திண்டுக்கல் : உலக மண் தின விழா

உலக மண் தின விழா

திண்டுக்கல் அடுத்த தோட்டனூத்து கிராமத்தில், வேளாண்மைத் துறை சாா்பில் உலக மண் தின விழா நடைபெற்றது. விழாவுக்கு வேளாண்மைத் துறை உதவி இயக்குநா் போது (திண்டுக்கல்) தலைமை வகித்தாா். வேளாண்மை உதவி இயக்குநா் (தரக்கட்டுப்பாடு) ராஜேஸ்வரி முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக வேளாண்மை இணை இயக்குநா் அ.அனுசுயா கலந்து கொண்டாா்.விவசாயிகளுக்கு மண் வள அடையாள அட்டைகளை வழங்கி அவா் பேசியதாவது: மண் வளத்தைப் பாதுகாக்கும் நோக்கில் கடந்த 2013 -ஆண் ஆண்டு முதல் ஆண்டுதோறும் டிச.5-ஆம் தேதி உலக மண் தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. மண்ணும், நீரும் வாழ்வின் ஆதாரம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் இந்த விழா கொண்டாடப்பட்டு வருகிறது, என்றார்.

Tags

Next Story