காந்தி காய்கறி மார்க்கெட்டில் மாநகராட்சி ஆணையர் திடீர் ஆய்வு

காந்தி காய்கறி மார்க்கெட்டில் மாநகராட்சி ஆணையர் திடீர் ஆய்வு

மாநகராட்சி ஆணையர் ஆய்வு

திண்டுக்கல் காந்தி காய்கறி மார்க்கெட்டில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு மேற்கொண்டு வியாபாரிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

திண்டுக்கல் மாநகராட்சிக்கு சொந்தமான காந்தி மார்க்கெட்டில் திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், உதவி செயற்பொறியாளர் சரவணகுமார் மற்றும் உதவி ஆணையர்கள் வள்ளி ராஜம், வில்லியம் சகாயராஜ், மாநகர் நல அலுவலர் பொறுப்பு செபாஸ்டியன், துப்புரவு ஆய்வாளர்கள் தட்சிணாமூர்த்தி, தங்கவேலு, கீதா ஆகியோர் கொண்ட குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டு அங்கு வியாபாரிகளிடம் உள்ள அடிப்படை வசதிகள் மற்றும் கடை விற்பனையாளர்களின் குறைகளை கேட்டறிந்தனர். மேலும் அங்கே உள்ள பொதுக்கழிப்பறையையும் பார்வையிட்டு சம்பந்தப்பட்ட துப்புரவு ஆய்வாளரிடம் தூய்மையாக பராமரிக்க அறிவுறுத்தினார். மேலும் காந்தி மார்க்கெட் நிர்வாகிகளை அழைத்து அவர்களுடைய குறைகளையும் கேட்டறிந்தார்.

Tags

Next Story