திண்டுக்கலில் தென் தமிழக மாநில அளவிலான எரிபந்து போட்டி

திண்டுக்கலில் தென் தமிழக மாநில அளவிலான எரிபந்து போட்டி

திண்டுக்கல் மாநில அளவிலான எறிபந்து போட்டி 

திண்டுக்கலில் தென் மாநில அளவிலான எரிபந்து போட்டியில் தூத்துக்குடி அணி முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

தமிழ்நாடு எரிபந்து கழகம் மற்றும் திண்டுக்கல் எரிமந்து கழகமும் இணைந்து நடத்தும் முதலாம் ஆண்டு தென் தமிழக மாநில அளவிலான எரிபந்து போட்டி திண்டுக்கல் மாவட்டம் ஏ கே வி வித்யாலயா பள்ளியில் நடைபெற்றது.தமிழகம் ஐந்து மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அதில் தமிழகத்தின் தென்மண்டலமாக மாவட்டங்கள் இடம்பெற்றது. திண்டுக்கல், தேனி, மதுரை ,விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இருந்து சுமார் 25க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கு பெற்றனர்.இதில் சிறப்பு விருந்தினராக தசரர் த்ரோபால் பெடரேசன் ஆப் இந்தியா மற்றும் தமிழக எரிபந்து கழகத் தலைவர் டி. பால விநாயகம்,ஏ கே வி பள்ளியின் தாளாளர் ராமலிங்கம் மற்றும் பள்ளியின் முதல்வர் கற்பகம் திண்டுக்கல் மாவட்ட எரிபந்துகழகத்தின் தலைவர் எஸ் ரமேஷ் செயலாளர் கண்ணன் நடுவர் குழு சேர்மன் ராஜேந்திர சேவியர்ஆகியோர் பங்கேற்றனர்.



Tags

Next Story