டிப்ளமோ பட்டதாரி தற்கொலை

டிப்ளமோ பட்டதாரி  தற்கொலை
பைல் படம்
வெள்ளிச்சந்தை அருகே டிப்ளமோ பட்டதாரி தற்கொலை செய்து கொண்டார்.

குமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகே செக்கடி விளை பகுதியை சேர்ந்தவர் கண்ணன் மகன் சுஜின் (22)டிப்ளமோ படித்துள்ளார். நேற்று கண்ணன் வழக்கம் போல் வேலைக்கு சென்று இருந்தார். மனைவியும் கூலி வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் சுஜின் மட்டும் தனியாக இருந்தார். வேலைக்கு சென்ற கண்ணன் மதியம் வீட்டுக்கு வந்த போது, சுஜின் வீட்டின் உத்தரத்தில் தூக்கில் பிணமான நிலையில் காணப்பட்டார். இது குறித்து வெள்ளிச்சந்தை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று , சுஜின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். -

சுஜின் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருக்கிறது. வேலை கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

Tags

Next Story