திருவள்ளூரில் இருந்து திருநெல்வேலிக்கு நேரடி பேருந்து சேவை தொடக்கம்

திருவள்ளூரில் இருந்து திருநெல்வேலிக்கு நேரடி பேருந்து சேவையை சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி வைத்தார்.

சென்னைக்கு அடுத்தபடியாக மிக அதிக மக்கள் தொகையும் நாள்தோறும் அதிகாலைகள் பயணிக்க கூடிய பயணிகள் இருக்கும் மாவட்டமாக திகழ்வது திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் பேருந்து நிலையத்திலிருந்து வெளியூர்களுக்கு குறைந்தபட்சம் அளவிலேயே பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மக்களின் நலனை கருத்தில் கொண்டு திருவள்ளூர் பேருந்து நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்கு நேரடியாக செல்லக்கூடிய புதிய விரைவு அரசு பேருந்து சேவையை இன்று திருவள்ளூர் பேருந்து நிலையத்திலிருந்து திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி ஜி ராஜேந்திரன் புதிய பேருந்து சேவையை கொடிய அசைத்து துவங்கி வைத்தார் .இந்நிகழ்வில் மாவட்ட அவைத் தலைவர் திராவிட பக்தன் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் மோதிலால்,முன்னாள் நகர மன்ற தலைவர் பொன் பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்

Tags

Next Story