நிலக்கடலை சாகுபடி செய்த வயலை வேளாண்மை இயக்குனர் நடராஜன் பார்வையிடல்

நிலக்கடலை  சாகுபடி செய்த வயலை வேளாண்மை  இயக்குனர் நடராஜன் பார்வையிடல்

வேளாண்மை இயக்குனர் நடராஜன்

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் தொகுதியில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்ட வயலை தமிழக வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை இயக்குனர் நடராஜன் ஆய்வு செய்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் பிள்ளை பெருமாநல்லூர் கிராமத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை இயக்குநர் நடராஜன், மாவட்ட ஆட்சியர் தலைவர் ஏ.பி.மகாபாரதி, சம்பா சாகுபடி பயிர்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தபோது, நிலக்கடலை பயிரிடப்பட்ட‌ வயதையும் ஆய்வு மேற்கொண்டனர். வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை கூடுதல் இயக்குநர் முரளிதரன், வேளாண்மை துறை இணை இயக்குநர் சேகர், நீர்வளத்துறை செயற்பொறியாளர் சண்முகம், சீர்காழி வருவாய் கோட்டாட்சியர். அர்ச்சனா, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை துணை இயக்குநர் வெற்றிவேலன் ஆகியோர் உள்ளனர்.

Tags

Next Story