நாகர்கோவில் ஆவின் பால் பண்ணையில் இயக்குனர் ஆய்வு 

நாகர்கோவில் ஆவின் பால் பண்ணையில் இயக்குனர் ஆய்வு 
ஆவின் இயக்குனர் ஆய்வு

குமரி மாவட்டம் நாகர்கோவில் கே.பி.ரோட்டில் அமைந்துள்ள ஆவின் பால் பண்ணையில் பால் உற்பத்தி மற்றும் மேம்பாட்டு துறை இயக்குநர் வினித் திடீர் ஆய்வு மேற்கொண்டார். தினமும் பால் கொள் முதல், பால் பாக்கெட் விற்பனை சரிவர நடை பெறுகிறதா என்றும், பால் கொள்முதல் அதிகரிக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

உடனடியாக பால் உற்பத்தி அதிகரிக்க கறவை மாடு கடன் பெற்றவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட இலக்கினை அடைய வேண்டும் என்று எடுத்துரைத்தார். பால் உற்பத்தியாளர்களுக்கு கறவை மாடு கடன் பால் உற்பத்தி நிலையங்களை தரமான பால் சங்கத்திற்கு கடன்கள் வழங்க அறிவுறுத்தினார். ஆவின் பொது மேலாளர் அருணகிரிநாதன், துணை பதிவாளர் சைமன் சார்லஸ் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags

Next Story