பாதயாத்திரை பக்தர்களுக்காக திசா ஹோமம்

பாதயாத்திரை பக்தர்களுக்காக திசா ஹோமம்

பாதயாத்திரை பக்தர்கள்

பழனி பாதயாத்திரை வரும் பக்தர்களின் நலன் வேண்டி திசா ஹோமம் நடைபெற்றது.
பழனி பாதயாத்திரை வரும் பக்தர்களின் நலன் வேண்டி, நேற்று வடக்கு கிரிவீதியில் உள்ள வீரதுர்க்கையம்மன் கோயிலில் சித்தனாதன் விபூதி நிறுவனம் சார்பில் திசா ஹோமம் நடந்தது. கோயில் அர்ச்சக ஸ்தானீகர் அமிர்தலிங்கம் மற்றும் செல்வசுப்பிரமணியம் தலைமையிலான சிவாச்சாரியார்கள் பூஜைகளை மேற்கொண்டனர். புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தம் உள்ள கலசம் வைத்து சிறப்பு யாகம் நடந்தது. இதனைத்தொடர்ந்து யாகசாலையில் வைக்கப்பட்ட தீர்த்தக் கலசம் கோயில் பிரகாரத்தில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வீரதுர்க்கையம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மகா தீபாராதனை செய்யப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags

Next Story