ரயில் மோதி மாற்றுத்திறனாளி பலி - உறவினர்கள் சோகம்

ரயில் மோதி மாற்றுத்திறனாளி பலி - உறவினர்கள் சோகம்

கண்ணன்

தேனி அருகே வலையப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன். காது மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியான இவருக்கு திருமணம் ஆகி இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்றது. இவர் அப்பகுதியில் ஆடுகளை மேய்த்து கூலி தொழிலாளியாக இருந்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை பூதிபுரம் - வலையப்பட்டி இடையில் உள்ள ரயில் தண்டவாள அருகில் ஆடுகளுக்கு தேவையான செடி கொடிகளை பறிப்பதற்கான வேலையில் ஈடுபட்டு கொண்டிருந்தார் அப்போது தண்டவாளத்தில் வந்த சோதனை ரயிலில் அடிபட்டு தலை மற்றும் கை கால்கள் சிதறி சம்பவ இடத்திலே உயிரிழந்தார் காது கேட்க முடியாத மாற்றுத்திறனாளி என்பதால் ரயிலின் சத்தம் கேட்காததால் ரயில் வருவதை அறியாமல் உயிரிழந்துள்ளதாக தெரியவந்தது. கண்ணன் உயிரிழந்ததை அறிந்த அவர்களது உறவினர்கள் அவரது உடலை பார்த்து கதறி அழுத சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது .இது குறித்து போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்

Tags

Next Story