காய்கறிகளுக்கு உரிய விலை கிடைக்காததால் ஏமாற்றம்

காய்கறிகளுக்கு  உரிய விலை கிடைக்காததால் ஏமாற்றம்

காய்கறிகள் 

திண்டுக்கல் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் காய்கறிகளுக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் காய்கறி உற்பத்தி அதிகளவு நடக்கிறது. கொடைக்கானல், தாண்டிக்குடி , கன்னிவாடி, வத்தலக்குண்டு, பழநி, ஒட்டன்சத்திரம், நத்தம், சிறுமலை, வடமதுரை, வேடசந்துார் உள்ளிட்ட பகுதிகளில் காய்கறிகள் அதிகளவு விவசாயம் செய்யப்படுகிறது. விலையைப் பொருத்தமட்டில் அவ்வப்போது வியாபாரிகள் நிர்ணயிக்கப்படும் விலை மாற்றங்கள் விவசாயிகளின் தலையெழுத்தை நிர்ணயிப்பதாக உள்ளது.இதில் வியாபாரிகள், இடைத்தரகர்களிடையே ஏற்படும் பேரத்தால் விவசாயிகள் உற்பத்தி செய்யப்படும் காய்கறிகளுக்கு உரிய விலை கிடைக்காமல் வெகுவாக பாதிக்கும் சூழல் உள்ளது.வியாபாரிகள், இடைத்தரகர்களே அதிக லாபம் ஈட்டுவதால் உற்பத்தி செய்யும் விவசாயிகள் செய்வதறியாது தவிக்கின்றனர்.

Tags

Next Story