ராமநாதபுரத்தில் பேரிடர் ஒட்டிகை ஒத்திகை நிகழ்ச்சி

ராமநாதபுரத்தில் பேரிடர் ஒட்டிகை ஒத்திகை நிகழ்ச்சி

பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சி 

ராமநாதபுரம்எஸ்டிபிஐ கட்சியின் பேரிடர் மீட்பு குழு ஒத்திகை கீழக்கரையில் கடற்கரையில் நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கடற்கரை பகுதியில் ஜெட்டி பாலம் அருகே பருவ மழையை முன்னிட்டு எஸ் டி பி ஐ கட்சியின் பேரிடர் மீட்பு குழு இணைந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஒத்திகை நடைபெற்றது. இதில் கீழக்கரை சார்பு ஆய்வாளர் முத்துக்குமார் கீழக்கரை வருவாய் ஆய்வாளர் வேல்முருகன் சமூக ஆர்வலர் அஜுகர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் நகர் எஸ்டிபிஐ கட்சி துணைத் தலைவர் ஜலில் வரவேற்புரை வழங்கினார். நகர் முன்னாள் தலைவர் பைசல் பேரிடர் மீட்பு குழு பற்றி விவரித்தார். இந்நிகழ்ச்சியில் .எஸ் டி பி ஐ கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ஜஹாங்கீர் அருஷி WIM மாவட்ட துணை தலைவி முபினா WIM நகர் பொறுப்பாளர் ஜன்னத்து மசூதா மாவட்ட ஊடக பொறுப்பாளர் ஜுபைர் கீழக்கரை காவல் நிலைய காவலர் ராம்கி கீழக்கரை தலையாரி பாண்டி சரவணன் மற்றும் எஸ்டிபிஐ கட்சியின் நகர் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

இந்நிகழ்ச்சியினை நகர் செயலாளர் அப்துல் காதர் ஏற்பாடுகள் செய்திருந்தார். இறுதியில் எஸ்டிபிஐ கட்சியின் நகர் முன்னாள் துணைத் தலைவர் ரீஹான் நன்றி உரை கூறினார்.

Tags

Next Story