கூட்டுறவு கடன் சங்கம் மூலம் கடன் வழங்கல்

கூட்டுறவு கடன் சங்கம் மூலம் கடன் வழங்கல்
 கடன் வழங்கும் விழா
செவல்குளம் கூட்டுறவு தொடக்க வேளாண்மை கடன் சங்கத்தில் மகளிர் சுய உதவி குழு மற்றும் விவசாயிகளுக்கு ரூ.70 லட்சம் கடன் வழங்கப்பட்டது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குருவிகுளம் ஒன்றியம் செவல்குளம் கூட்டுறவு தொடக்க வேளாண்மை கடன் சங்கம் மூலம் மகளிர் சுய உதவி குழுக்களில் இருந்து பெண்களின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா பரிந்துரையின் பேரில் மகளிர் சுய உதவி குழு கடன் மற்றும் விவசாயிகளுக்கு பயிர் கடன் ரூபாய் 70 லட்சம் மகளிருக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ராஜா கலந்து கொண்டு பெண்களுக்கு காசோலையை வழங்கினார். இத் திட்டத்தின் மூலம் மூலம் 160 பெண்கள் 47 ஆண்கள் என 200க்கும் மேற்பட்டோர் பயன்பெற்றனர் மேலும் இதில் ஒன்றிய செயலாளர் கடற்கரை, மாவட்ட கவுன்சிலர் சுதா பிரபாகரன் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story