மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

நலத்திட்ட உதவிகள் வழங்கல் 

திருப்பத்தூரில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

P திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி சின்னக்கடை தெரு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் "மக்களுடன் முதல்வர்" திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி கலந்து கொண்டு 2203 பயனாளிகளுக்கு 1 கோடியே 26 லட்சத்து 73 ஆயிரத்து 508 ரூபாய் மதிப்பீட்டிலான மாற்று திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள்,மற்றும் தயல் இயந்திரம், சுயஉதவி குழுக்களுக்கு வங்கி கடன் கல்வி கடன்,வீட்டுமனை பட்டா,உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, திருப்பத்தூர் சப் கலெக்டர் பானு, திருப்பத்தூர் நகர்மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேசன், திருப்பத்தூர் வட்டாட்சியர் ஆனந்தன் கிருஷ்ணன், மண்டல தாசில்தார் முரளி கிருஷ்ணன் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் பயனாளிகள் ஆளும் கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்..

Tags

Next Story