வரி செலுத்தாதவர்களின் வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

வரி செலுத்தாதவர்களின் வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு
குடிநீர் இணைப்பு துண்டிப்பு
விழுப்புரம் மாவட்டம் வளவனூர் பேரூராட்சியில் வசித்து வரும் சிலர் குடிநீர் வரி செலுத்தாமல் உள்ளனர். இதனால் பேரூராட்சி நிர்வாகம் மேம்பாட்டு பணிகளை செய்ய முடியவில்லை. வரிகட்டாமல் உள்ள வீடுகளின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கியும், பலமுறை தகவல் தெரிவித்தும் இதுவரை குடிநீர் வரியை கட்டவில்லை. இந்த நிலையில் பேரூராட்சி செயல் அலுவலர் அண்ணாதுரை தலைமையில் பணியாளர்கள் வளவனூர் பேரூராட்சி 6-வது வார்டுக்குட்பட்ட குமாரகுப்பம் பகுதிகளில் வரி கட்டாத 2 பேரின் வீடுகளுக்கு செல்லும் குடிநீர் இணைப்புகளை துண்டித்தனர். அப்போது வளவனூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags

Next Story