வயல்வெளியில் புதைந்து கிடந்த கல்வெட்டு கண்டெடுப்பு

வயல்வெளியில் புதைந்து கிடந்த கல்வெட்டு கண்டெடுப்பு

தஞ்சாவூரில் வயல்வெளியில் புதைந்து கிடந்த சோழர்கால நந்தி, விஷ்ணு கற்சிற்பங்கள், பல்லவர் கால கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.


தஞ்சாவூரில் வயல்வெளியில் புதைந்து கிடந்த சோழர்கால நந்தி, விஷ்ணு கற்சிற்பங்கள், பல்லவர் கால கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

வயல்வெளியில் புதைந்து கிடந்த சோழர்கால நந்தி, விஷ்ணு கற்சிற்பங்கள்: பல்லவர் கால கல்வெட்டு கண்டெடுப்பு தஞ்சாவூர் மாவட்டம் பூதலுார் அருகே சித்திரக்குடியை சேர்ந்த முனைவர் சத்தியா என்பவரின் வயலில் நந்தி ஒன்று பாதி புதைந்த நிலையில் அளித்த தகவலின் அடிப்படையில், தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நுாலகத்தின் தமிழ் பண்டிதரும், வரலாற்று ஆய்வாளருமான மணிமாறன், பொந்தியாகுளம் அரசு தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் தில்லைகோவிந்தராஜன், ஆசிரியர் ஜெயலெட்சுமி ஆகியோர் ஆய்வு செய்து கண்டுபிடித்தனர். இது குறித்து மணிமாறன் நிருபர்களிடம் கூறியதாவது: சித்திரக்குடி, கச்சமங்கலம், மாறனேரி, வெண்டயம்பட்டி போன்ற ஊர்களில் பல்லவர் காலக் கல்வெட்டுகள் காணப்படுகின்றது. கி.பி.7ம் நுாற்றாண்டில் பல்லவர்களுக்குட்பட்ட முத்தரையர் ஆட்சி செந்தலை எனும் ஊரினைத் தலைமையிடமாக கொண்டு ஆட்சி நடந்துள்ளது. பிறகு சோழர்கள் ஆட்சிக்காலத்தில் சித்திரக்குடி லிங்கத்தடி மேடு என அழைக்கப்படுகிறது.

இப்பகுதியில் வயல்வெளியில் பாதி உடல் பூமிக்குள் மறைந்த நிலையில் ஒரு நந்தி உள்ளது. இந்த நந்தியானது கி.பி.9 – 10ம் நுாற்றாண்டினின் சோழர் காலத்தை சேர்ந்தாக உள்ளது. இந்நந்தியின் கழுத்தில் மணிமாலை சிறப்பாக வடிவமைக்கப்பெற்றுள்ளது. திமில் அப்பகுதியில் உள்ள காளைக்கு உள்ளது போலவே காணப்படுகிறது. மேலும், ஆனந்தகாவேரி வாய்க்காலின் உட்புற தென்பு கரையினை ஓட்டியவாறு தலை மற்றும் ஒரு கை உடைந்த நிலையில், இடுப்புக்கு கீழாக வாய்க்கால்கரையில் பாதி புதைந்த நிலையில் சுமார் மூன்றடி உயரமுள்ள விஷ்ணு சிற்பம் கண்டறியப்பெற்றது. இப்பகுதியில் பெரிய சிவன்கோவில் இருந்து முற்றிலுமாக அழிந்து போயிருக்கக்கூடும். பிற்காலத்தில் அந்த பகுதியில் புதியதாக கோவில் ஒன்று அமைக்கப்பட்ட நிலையில், கி.பி.8ம் நூற்றாண்டைச் சார்ந்த பல்லவர் கால நந்தி ஒன்று உள்ளது.இந்த நந்தியின் அடிபீடத்தில் பல்லவர் கல்வெட்டு இரண்டு வரி உள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்லவர் கால எழுத்துப்பொறிப்புடன் இருந்து முதன்முதலாக கண்டறிய பெற்றுள்ளது சிறப்பாகும். இக்கோவில் வளாகத்தில் அச்சுதப்ப நாயக்கர் கால கல்வெட்டு ஒன்றும், பிற்காலத்திய கல்வெட்டு ஒன்றும் உள்ளது. சித்திரக்குடி சோழர்கள் காலத்தில் சிறந்து விளங்கியது. சோழர்களுக்கு முன் ஆட்சி செய்த பல்லவர்கள் காலத்திலும் முக்கியப் பகுதியாக இருந்துள்ளது இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story