சமூக அளவிலான புற்றுநோய் கண்டறியும் திட்டம் குறித்து கலந்தாய்வு

சமூக அளவிலான புற்றுநோய் கண்டறியும் திட்டம் குறித்து கலந்தாய்வு
 கலந்தாய்வு 
தமிழகத்தில் சமூக அளவிலான புற்றுநோய் கண்டறியும் திட்டத்தினை அரசு அறிவித்துள்ளது. அதனடிப்படையில் கன்னியாகுமரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நவம்பர் 22-ம் தேதி இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இது தொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சமூக அளவிலான புற்றுநோய் கண்டறியும் திட்டம் குறித்து பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிமன்ற தலைவர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் கலந்தாய்வு நடத்தினார். இக்கூட்டத்தில் பொது சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் மரு.சு.மீனாட்சி, சூரியநாராயணன், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிமன்ற தலைவர்கள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story