குரூப்-4 தேர்வு குறித்த ஆலோனைக்கூட்டம்

குரூப் 4 தேர்வை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் விருதுநகரில் நடந்தது.

விருதுநகர் மாவட்டம் ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு தொடர்பான, மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து, அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்ததாவது:- விருதுநகர் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசுப்; பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக வரும் 9ஆம் தேதி பல்வேறு துறைகளில் காலியாக உள்ள குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் 291 தேர்வு மையங்களில் 71,384 விண்ணப்பதாரர்கள் தேர்;வு எழுத உள்ளார்கள். தேர்வு நடைபெறும் மையங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள 291 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துணை வட்டாட்சியர் நிலையில் 53 தேர்வு நடமாடும் குழுக்கள் மற்றும் துணை ஆட்சியர் நிலையில் 10 பறக்கும் படை அலுவலர்களும், 291 தேர்வு மையங்களுக்கும் வீடியோகிராபர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

விருதுநகர் வட்டத்தில் 48 தேர்வு மையங்களில் 10,752 விண்ணப்பதாரர்களும், அருப்புக்கோட்டை வட்டத்தில் 41 தேர்வு மையங்களில் 10,002 விண்ணப்பதாரர்களும், காரியாபட்டி வட்டத்தில் 14 தேர்வு மையங்களில் 3782 விண்ணப்பதாரர்களும், இராஜபாளையம் வட்டத்தில் 52 தேர்வு மையங்களில் 12,964 விண்ணப்பதாரர்களும், சாத்தூர் வட்டத்தில் 26 தேர்வு மையங்களில் 6113 விண்ணப்பதாரர்களும், சிவகாசி வட்டத்தில் 45 தேர்வு மையங்களில் 12,046 விண்ணப்பதாரர்களும், திருவில்லிப்புத்தூர் வட்டத்தில் 36 தேர்வு மையங்களில் 8526 விண்ணப்பதாரர்களும், திருச்சுழி வட்டத்தில் 11 தேர்வு மையங்களில் 1790 விண்ணப்பதாரர்களும், வெம்பக்கோட்டை வட்டத்தில் 7 தேர்வு மையத்தில் 1789 விண்ணப்பதாரர்களும், வத்திராயிருப்பு வட்டத்தில் 11 தேர்வு மையத்தில் 3620 விண்ணப்பதாரர்களும் என மொத்தம் 71,384 தேர்வர்கள் தேர்வு எழுதுகின்றனர்.

தேர்வு மையங்களின் முன் தேர்வு எழுதுபவர்களின் பதிவு எண்கள், தேர்வு அறைகளின் எண்கள் ஆகிய விபரங்கள் அடங்கிய அறிவிப்பு பலகைகள் பெரிதாகவும், தெளிவாகவும் வைக்கப்பட வேண்டும். தேர்வு எழுதுபவர்கள் தேர்வு அறைக்கு சிரமமின்றி செல்வதற்கு ஏதுவாக வழிகாட்டி பலகைகள் வைக்கப்பட வேண்டும். தேர்வு அறைக்கு முன் அறையினுடைய எண்கள் தெளிவாகவும், பெரிதாகவும் ஒட்டப்பட வேண்டும். தேர்வர்கள் காலை 09.00 மணிக்கு முன்னதாகவே தேர்வு அறைக்கு வந்துவிட வேண்டும். தேர்வர்கள் அறைக்கு வந்த பின்னர் விடைத்தாள்கள் கொடுக்கப்பட வேண்டும்.

விருதுநகர்ஒரு தேர்வருக்கு ஒரு விடைத்தாள் மட்டுமே கொடுக்கப்பட வேண்டும். அந்த விடைத்தாள் வேறு ஏதும் சேதமடைந்தாலோ அல்லது எழுத்து பிழை இருந்தாலோ மட்டுமே வேறு விடைத்தாள் கொடுக்கப்பட வேண்டும். நுழைவுச் சீட்டு இல்லாமல் வரும் தேர்வர்களை அனுமதிக்கப்பட கூடாது. தேர்வர்கள் தேர்வு மையங்களில் எந்தவொரு மின்னனு சாதனங்கள் (கால்குலேட்டர், மொபைல் போன்) ஆகியவற்றை தேர்வு மையங்களுக்கு கொண்டு வர அனுமதிக்கக்கூடாது. தேர்வுக்கூட கண்காணிப்பாளர்களும் அலைபேசியை தேர்வறைக்குள் பயன்படுத்தக்கூடாது. அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்தார்கள்.

Tags

Next Story