துப்புரவு பணியாளர்கள் அனுப்பிவைப்பு

துப்புரவு பணியாளர்கள் அனுப்பிவைப்பு

நிவாரண பொருட்கள் அனுப்பிவைப்பு 

திண்டுக்கல்லில் இருந்து தூத்துக்குடிக்கு நிவாரண பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டது.
திண்டுக்கல்லில் இருந்து தூத்துக்குடிக்கு நிவாரண பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டது. துப்புரவு பணியாளர்களும் சென்றனர். திண்டுக்கல் மாநகராட்சி சார்பாக தென் மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் துப்புரவு பணி மேற்கொள்ள 150 துப்புரவு பணியாளர்கள் 3 பேருந்துகளில் அனுப்பி வைக்கப்பட்டனர். நிவாரண பொருட்களும் இத்துடன் சேர்ந்து செல்கின்றன. மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் தலைமையில் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், துணை மேயர் ராஜப்பா முன்னிலையில் கொடியசைத்து அனுப்பி வைக்கப்பட்டனர். நிகழ்ச்சியில் மாநகர் நல அலுவலர் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story