வெள்ள நிவாரணப்பொருட்கள் அனுப்பிவைப்பு

திருப்பூரிலிருந்து காங்., பெண் கவுன்சிலர் சார்பில் திருநெல்வேலிக்கு வெள்ள நிவாரணப்பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டன.
திருப்பூரிலிரிந்து, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெண் கவுன்சிலர் 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள டீ சர்ட், முட்டை சமையல் பொருட்கள் அடங்கிய நிவாரண பொருட்களை திருநெல்வேலிக்கு அனுப்பி வைத்தார். திருப்பூரிலிருந்து, பெருந்துறை சிறப்பு நிலை பேரூராட்சி இரண்டாவது வார்டு பெண் கவுன்சிலர் பஷீரியாபேகம் மழையால் பாதிப்படைந்த திருநெல்வேலி பகுதிக்கு நிவாரண பொருட்களை அனுப்பி வைத்தார். முட்டை, பிரட், நாப்கின், குடிநீர், டீ சர்ட்கள், தக்காளி, வெங்காயம், சேமியா உள்ளிட்ட சமையல் பொருட்கள் என ஐந்து லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை லாரியில் அனுப்பி வைத்தார். இந்த லாரியை காங்கிரஸ் கட்சி மாநில, மாவட்ட நிர்வாகிகள் கொடியசைத்து அனுப்பி வைத்தனர். சமையல் பொருட்கள் தொகுப்புடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு சமைக்கும் வகையிலான சமையல் பொருட்கள் உள்ளிட்டவற்றையும் அனுப்பி வைத்தனர்.

Tags

Next Story