கோவில்பட்டிக்கு திருச்செங்கோடு நகராட்சி சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பிவைப்பு

கோவில்பட்டிக்கு திருச்செங்கோடு நகராட்சி சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பிவைப்பு

நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு 

கனமழையால் பாதிக்கப்பட்ட கோவில்பட்டிக்கு திருச்செங்கோடு நகராட்சி சார்பில் 10 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டது.

கடந்த தினங்களுக்கு முன் தென் மாவட்டங்களில் பெய்த கன மழையால் வீடுகளையும் வாழ்வாதாரங்களையும் இழந்து தவிக்கும் பொது மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் வகையில் திருச்செங்கோடு நகராட்சி சார்பில் ஐந்து டன் அரிசி ஒரு டன் சக்கரை, ஒரு டன் பருப்பு, ஒரு டன் உப்பு, என சுமார் பத்து லட்சம் மதிப்புள்ள உணவுப் பொருள்கள் வாகனம் மூலம் கோவில்பட்டி நகராட்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் திருச்செங்கோடு நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு, ஆணையாளர் சேகர், பொறியாளர் சரவணன், துப்புரவு அலுவலர் வெங்கடாசலம், மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுஆயிரம் பைகளில் பொருட்களை கோவில்பட்டி நகராட்சிக்கு வேன் மூலம் அனுப்பி வைத்தனர்.

Tags

Next Story