காட்டுப்புத்தூர் பேரூராட்சி சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு

காட்டுப்புத்தூர் பேரூராட்சி சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு

நிவாரண பொருட்கள் 

காட்டுப்புத்தூர் பேரூராட்சி அலுவலகத்தின் சார்பில் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் பேரூராட்சியின் சார்பில் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி பகுதியில் பெய்த கன மழை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு பொருட்கள் மற்றும் அத்யாவசிய பொருட்கள் சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில் பாதுகாப்பாக அட்டைப்பெட்டியில் பேக்கிங் செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது. முன்னதாக முசிறி தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் ஆலோசனையின் பேரில் காட்டுப்புத்தூர் பேரூராட்சி தலைவர் சங்கீதா சுரேஷ் மற்றும் துணைத் தலைவர் சுதா சிவா செல்வராஜ், செயல் அலுவலர் சாகுல் ஹமீது ஆகியோர் தலைமையில் மன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் கலந்து ஆலோசனை செய்யப்பட்டு பாதிக்கபட்ட மக்களுக்கு தேவையான பொருட்கள் வாங்கி அனுப்பி வைத்தனர். கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காட்டுப்புத்தூர் பேரூராட்சியில் இருந்து நிவாரண பொருட்கள் அனுப்பி வைத்த நிகழ்வு அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

Tags

Next Story