ரிக், லாரி உரிமையாளர் சங்கம் சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு

ரிக், லாரி உரிமையாளர் சங்கம் சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு

நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு 

திருச்செங்கோடு ரிக் உரிமையாளர்கள் சங்கம்,லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் சென்னையில் மிக்சாம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ரூ.10 லட்சம் மதிப்பில் உள்ள பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. 2000 பெட்சிட்,2000 டீசர்ட், ஆயிரம் சேலைகள்,2000 வேஷ்டிகள் உள்ளிட்ட பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் உமா அவர்களின் வேண்டுகோளின் படி திருச்செங்கோடு ரிக் உரிமையாளர்கள் சங்கம், மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் ரூ.10 லட்சம் மதிப்பில் நிவாரண பொருட்கள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. திருச்செங்கோடு ரிக் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் லட்சுமணன், செயலாளர் சத்தியமூர்த்தி, லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கே பி ஆர் மூர்த்தி ஆகியோர் தலைமையில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில், திருச்செங்கோடு நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு, நாமக்கல் மேற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் சுரேஷ்பாபு, ஆகியோரிடம் பொருட்கள் வழங்கபட்டன

Tags

Next Story