நிவாரணப்பொருட்கள் அனுப்பி வைப்பு

தூத்துக்குடி மக்களுக்கு ஈரோடு் தெற்கு மாவட்ட திமுக சார்பில் நிவாரணப்பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
தென்மாவட்டங்களான திருநெல்வேலி , தூத்துக்குடி , தென்காசி உள ளிட்ட மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக பொதுமக்கள் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர். கனமழை காராணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தவிக்கும் தூத்துகுடி மாவட்ட மக்களுக்கு உதவ ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில் இரண்டு லாரிகளில் பிஸ்கட், சமையல் எண்ணெய், அரிசி பருப்பு, சமையல்பொருட்கள் ,பெட்ஷீட்,வேஷ்டி ,சேலை, மற்றும் நிவாரண பொருட்களை தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் மது விலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் சு.முத்துச்சாமி இன்று அனுப்பி வைத்தார்

Tags

Next Story