சேந்தமங்கலத்தில் இருந்து நிவாரணப்பொருட்கள் அனுப்பி வைப்பு

சேந்தமங்கலத்தில் இருந்து நிவாரணப்பொருட்கள் அனுப்பி வைப்பு

சேந்தமங்கலத்தில் இருந்து நிவாரணப்பொருட்கள் அனுப்பி வைப்பு

சேந்தமங்கலம், டிச. 20 துாத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கபட்டோருக்கு, சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதியில் இருந்து ரூபாய் 3 லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருட்களை சேந்தமங்கலம் தாலுகா அலுவலகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது. நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா ஏற்பாட்டின் பேரில், சேந்தமங்கலம் எம்.எல்.ஏ., பொன்னுசாமி, அட்மா குழு தலைவர் அசோக்குமார் ஆகியோர் தலைமையில் சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதியில் இருந்து அரிசி, பருப்பு, எண்ணெய், ரவை, சர்க்கரை, கோதுமை மாவு, துணிமணிகள், சோப்பு, பால் பவுடர், குடிநீர், பிஸ்கட், ஜீஸ் உள்ளிட்ட ரூபாய் 3 லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் தாசில்தார் சீனிவாசன், ஆர்.ஐ., பிரகாஷ், அட்மா குழு துணைத்தலைவர் தனபாலன், ஒன்றிய குழு உறுப்பினர் பெரியசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story