இருபிரிவினர் இடையே தகராறு - போலீசார் சமரசம்

இருபிரிவினர் இடையே தகராறு - போலீசார் சமரசம்
தகராறு 
கெங்கவல்லியில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட தகராறை சமரசம் செய்த போலீசார் மீண்டும் மோதல் நிகழாமல் இருக்க பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கெங்கவல்லி:சேலம் மாவட்டம் கெங்கவல்லி பகுதியை சேர்ந்தவர்கள் சஞ்சய் (வயது 18) சசி, மணி பாரதி, ஜெகன், சூர்யா. இவர்கள் 5 பேரும் நேற்று முன்தினம் இரவு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே உள்ள ஓட்டலுக்கு வந்து உணவு பார்சல் வாங்கி சென்றனர். அந்த ஓட்டலில் ஆகியோர் உணவு பார்சல் வாங்க நின்று இருந்தனர். அப்போது இரு பிரிவினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர்.இந்த நிலையில் நேற்று இரு பிரிவினை சேர்ந்த பெரியவர்கள் முன்னிலையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்திமதி, சப்-இன்ஸ்பெக்டர் பெரியண்ணன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து எந்த ஒரு பிரச்சினையும் ஏற்படாமல் இருக்க 8 பேரிடம் போலீசார் எழுதி வாங்கி கொண்டு அனுப்பினர். மேலும் இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்படாமல் இருக்க நடுவலூர், கெங்கவல்லி பகுதியில் 20-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story