முன்விரோதம் காரணமாக தகராறு -4 பேருக்கு வலைவீச்சு

முன்விரோதம் காரணமாக தகராறு -4 பேருக்கு வலைவீச்சு

முன்விரோதத்தால் தகராறு

தண்டலம் கிராமத்தில் முன்விரோதத்தால் தாய்-மகளை தாக்கிய 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
காஞ்சீபுரம் அருகே தண்டலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோகுலன். இவரது மனைவி அஸ்வினி. இவர் கீழ்நாயகம்பாளையத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்தார். அஸ்வினி குடும்பத்தினருக்கும் ,அவரது சித்தப்பா குமரேசன் குடும்பத்திற்கும் இடையே முன்விரோதம் காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த குமரேசன், அவரது மனைவி விஜயபாரதி, உறவினர்கள் தாமோதரன், சிவா ஆகியோர் அஸ்வினியை சரமாரியாக தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.இதுகுறித்து தூசி காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story