தவணைத் தொகை செலுத்துவதில் தகராறு - விசைத்தறி தொழிலாளி மீது தாக்குதல்

தவணைத் தொகை செலுத்துவதில் தகராறு - விசைத்தறி தொழிலாளி மீது தாக்குதல்

காவல் நிலையம் 

பல்லடம் அருகே தவணைத் தொகை செலுத்துவதில் ஏற்பட்ட தகராறில் விசைத்தறி தொழிலாளியை தாக்கிய தனியார் நிதி நிறுவன ஊழியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
பல்லடம் அருகே உள்ள செம்மிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜிவ்காந்தி (வயது 39).விசைத்தறி தொழிலாளி. இவர் கோவை மாவட்டம், சூலூர் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. இதற்காக மாதம் தவணைத் தொகையாக ரூ. 5000 செலுத்தி வந்ததாகவும், கடந்த சில மாதங்களாக தவணைத் தொகையை தாமதமாக கட்டியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சென்ற மாதம் தவணைத் தொகை கட்டுவதில் தாமதமானதால் நிதி நிறுவனத்தில் பணிபுரியும் கருப்பசாமி என்பவர் ராஜிவ்காந்தியிடம் கடன் தொகை வசூலிக்க வந்துள்ளார். அப்போது இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பில் முடிந்தது. இதில் ராஜிவ்காந்தியை கருப்பசாமி கடுமையாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதன் பின்னர் அவர் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து பல்லடம் போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story