தலைவா பாளையத்தில் பொதுப் பாதையை பயன்படுத்துவது தொடர்பாக தகராறு

தளவாபாளையத்தில் பொதுப் பாதையை பயன்படுத்துவது தொடர்பாக தகராறு ஏற்பட்ட விவகாரத்தில் கணவன் மனைவி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தலைவா பாளையத்தில் பொதுப் பாதையை பயன்படுத்துவது தொடர்பாக தகராறு. கணவன் மனைவி மீது வழக்கு பதிவு. கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தளவாபாளையம் பஜார் பகுதியை சேர்ந்தவர் மறைந்த தமிழரசனின் மனைவி ராஜேஸ்வரி வயது 57. இவரது வீட்டின் அருகாமையில் குடியிருந்து வருபவர் ரவிச்சந்திரன் மற்றும் அவரது மனைவி தாமரைச்செல்வி என்கிற செல்வி இந்த இரு குடும்பத்தினருக்கும் வசிக்கும் பகுதியில் பொது பாதை ஒன்று உள்ளது. பொதுப் பாதையை பயன்படுத்துவது தொடர்பாக இரு தரப்பினர் இடையே ஏற்கனவே முன் விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் மே 30ஆம் தேதி காலை 9:30 மணி அளவில், ராஜேஸ்வரி அந்தப் பொது பாதையில் நடந்து சென்றுள்ளார்.

அப்போது அங்கு வந்த ரவிச்சந்திரன் மற்றும் அவரது மனைவி தாமரைச்செல்வி என்கிற செல்வி ஆகியோர், மீண்டும் பொது பாதையை பயன்படுத்துவது தொடர்பாக ராஜேஸ்வரியை தடுத்து நிறுத்தி, தகாத வார்த்தை பேசி கைகளால் தாக்கியுள்ளனர். பின்னர் தடிகளை காட்டி தாக்குவேன் என துன்புறுத்தி உள்ளனர். சம்பவம் குறித்து ராஜேஸ்வரி காவல் நிலையத்தில் அளித்த புகார் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக ரவிச்சந்திரன் மற்றும் செல்வி ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.

Tags

Next Story