கடன் பணத்தை கேட்கும் போது தகராறு - இருவர் காயம் !

கடன் பணத்தை கேட்கும் போது தகராறு - இருவர் காயம் !

 வழக்கு பதிவு

கொடுத்த பணத்தை திருப்பி கேட்கும் போது தகராறு. இருவர் காயம். காவல்துறை வழக்கு பதிவு.
கொடுத்த பணத்தை திருப்பி கேட்கும் போது தகராறு. இருவர் காயம். காவல்துறை வழக்கு பதிவு. கரூர் மாவட்டம், வெள்ளியணை, பகவதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தங்கவேல் மகன் கார்த்திகேயன் வயது 28. இவர் கரூரை அடுத்த சின்ன மூக்கணாங்குறிச்சி, கன்னிமார்பட்டி பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் மகன் கார்வேந்தன் வயது 24 என்பவரிடம் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு ரூபாய் 20,000 கடனாக பெற்றிருந்தார். வாங்கிய கடனில் ரூபாய் 5 ஆயிரத்தை திருப்பி செலுத்தியுள்ளார் கார்த்திகேயன். மீதி தொகையை செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் மார்ச் 30ஆம் தேதி மதியம் 1:30 மணி அளவில் கார்த்திகேயன் அவரது வீட்டில் அமர்ந்திருந்த போது, அங்கு வந்த கார்வேந்தன் மீதி தரவேண்டிய 15 ஆயிரம் ரூபாயை தன்னிடம் கொடுக்குமாறு கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் எழுந்துள்ளது. ஒரு கட்டத்தில் கார்வேந்தன் கார்த்திகேயனை தகாத வார்த்தை பேசி, கல்லால் தாக்கி காயப்படுத்தியுள்ளார். இதில் கார்த்திகேயனுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. அதே சமயம் கல்லை பயன்படுத்தும் போது கார்வேந்தனுக்கு கையில் காயம் ஏற்பட்டது. எனவே, இருவரும் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக கார்த்திகேயன் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக தகாத வார்த்தை பேசி, கல்லால் தாக்கிய கார்வேந்தன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் காவல்துறையினர்.

Tags

Next Story