திருமருகலில் திமுக சார்பில் துண்டு பிரசுரம் வழங்கல்

திருமருகலில் திமுக சார்பில் துண்டு பிரசுரம் வழங்கல்

துண்டு பிரசுரங்கள் விநியோகம் 

நாகை மாவட்டம் திருமருகலில் திமுக சார்பில் இல்லம் தோறும் ஸ்டாலின் குரல் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நாகை மாவட்டம் திருமருகலில் திமுக சார்பில் இல்லம் தோறும் ஸ்டாலின் குரல் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நாகை மாவட்டம் திருமருகலில் ஒன்றிய திமுக சார்பில் இல்லம் தோறும் ஸ்டாலின் குரல் திராவிட மாடல் அரசின் இரண்டரை ஆண்டு சாதனைகள் விளக்க துண்டு பிரசுர வழங்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு திருமருகல் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் செல்வ செங்குட்டுவன் தலைமை தாங்கி பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் பன்னீர்செல்வம்,மாவட்ட துணை செயலாளர் ஆரூர் மணிவண்ணன்,

மாவட்ட பிரதிநிதிகள் ஜெயக்குமார்,ஜெயபால்,ஒன்றிய துணை செயலாளர்கள் ஏர்வாடி மதியழகன்,அஞ்சா நெடுமாறன்,ஒன்றிய பொருளாளர் தமிமுன் அன்சாரி, அயலக அணி மாவட்ட துணை தலைவர் விஜயகணபதி,ஊராட்சி மன்ற தலைவர்கள் விவேகானந்தன்,கார்த்திகேயன்,மாவட்ட மகளிர் அணி துணை தலைவர் ஜெயலெட்சுமி,ஒன்றிய குழு உறுப்பினர்கள் பேபி சரளா பக்கிரிசாமி,

லதா அன்பழகன்,வினோதினி கார்த்திக் மற்றும் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story