பள்ளி குழந்தைகளுக்கு பிரியாணி வழங்கல்

பள்ளி குழந்தைகளுக்கு பிரியாணி வழங்கல்
பிரியாணி வழங்கல்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக இளைஞரணி சார்பில் பேராவூரணியில் பள்ளி மாணவர்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டது.

திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் திமுக இளைஞர் அணி சார்பில் கட்சிக் கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பேராவூரணி ஊராட்சி ஒன்றிய வடகிழக்கு தொடக்கப்பள்ளியில் பயிலும், மாணவ, மாணவிகள், அங்கன்வாடி குழந்தைகள் என 200 க்கும் மேற்பட்டோருக்கு சிக்கன் பிரியாணி, முட்டை வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட அவைத் தலைவர் சுப.சேகர் தலைமை வகித்தார்.

மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆதி.ராஜேஷ் முன்னிலை வகித்து, பள்ளி குழந்தைகளுக்கு பிரியாணி வழங்கினார். நிகழ்ச்சியில் பேராவூரணி வடக்கு ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் ஆர்.கே.பி.குமார், பேராவூரணி தெற்கு இளைஞரணி நிர்வாகி பிரவீன் ஆனந்த், இளைஞர் அணி துணை அமைப்பாளர் பட்டுக்கோட்டை கார்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் அப்துல் மஜீத், திமுக நகர செயலாளர் என்.எஸ்.சேகர், தகவல் தொழில்நுட்ப அணி ஒன்றிய அமைப்பாளர் அஜய், இளைஞர் அணி நிர்வாகிகள் பிரகாஷ், முத்துப்பாண்டி, கெவின் பாலாஜி, விஜய், விக்னேஷ் கலந்து கொண்டனர்.

Tags

Next Story