ஜவாஹிருல்லா எம்எல்ஏ மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கல்

ரெகுநாதபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு எம்எல்ஏ ஜவாஹிருல்லா புத்தகங்களை வழங்கினார்.

ரெகுநாதபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு எம்எல்ஏ ஜவாஹிருல்லா புத்தகங்களை வழங்கினார் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றியம் ரெகுநாதபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் கோடை விடுமுறைக்கு பிறகு நேற்று பள்ளி துவங்கப்பட்டது. பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா வருகை புரிந்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் புத்தகங்களை வழங்கி வாழ்த்துரை வழங்கினார்.

பின்னர் பள்ளி குழந்தைகளுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பாபநாசம் ஒன்றிய குழு தலைவர் சுமதி கண்ணதாசன், பாபநாசம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் சிவகுமார், பள்ளி தலைமை ஆசிரியர் பரிமளா, உதவி ஆசிரியை தமிழ் தென்றல், சத்துணவு அமைப்பாளர் ஸ்ரீவித்யா மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story